குண்டும் குழியும்!
------------------------------
மழைக்கால சென்னை சாலைகள் தத்துவம்
புகட்டும் போதி மர புத்தர்கள்!
வாழ்வின் மேடு பள்ளங்களை
" அசால்டாக" " ஆஸ்பால்ட்டில் " காட்டும் சமத்துவர்கள்!
இரு சக்கரம், பல சக்கரம்
என்ற வேறுபாடே கிடையாது.
பல குண்டுகளையும், மிகமிகப்பல
குழிகளையும் உடைய,
கூட்டுக் குடும்பம், நம் சாலைகள்!
ஒரு சமயம் ஏற்றம், பல சமயங்களில் இறக்கம்.
வேகத் தடைகள் திண்டுக்கல்லில்
உருவாக்கப்படுகின்றனவோ?
பல சாலைக்குழிகளில் கை விட்டால்(!) வைரமும் கிடைக்கலாம்; காக்கைக்கு,
கற்கள்போடமலேயே அருந்த நீர்!
"குண்டு கண் அகழி"*யும்
அணுகுண்டுகளும். எதற்கு ?
எதிரிகளை நம்சாலைகளில் பயணிக்க விட்டால், முழங்கால்கள் பிடரியில்பட ஓட்டம்பிடிப்பரே!
குழி என்பது நில அளவையாம்.
1 காணி என்பது மூன்று குழியாம்.
பாரதி கேட்ட காணி் இதுதானோ!!
நம்நில வௌவ்வும் பேராசைக்
கண்ணர்களுக்குத் தெரிந்தால் சாலைகளும் ஆக்ரமிக்கப்படும்.
சாலை போடும் ஒப்பந்த தார ருக்கு ஹடயோகம் தெரியமோ?! தாம் போடும் சாலைகளில் யோகநிலையில் பயணிப்பாரோ?!
குண்டு என்பது அக்காலத்தில் விறகுத்தொட்டிகளில் ஓர் அளவை.இப்போதும் அகராதியில் காணலாம்.
வீட்டுக்கு வந்தேன். எதிரில் வந்தாள்ஓர் அழகுச்சிறுமி.
குறுநகை புரிந்தாள்; கன்னத்தில் குழி ! அழகோ அழகு!!
இறைவனைப்போற்றினேன்.
• குண்டு கண் அகழி- பதிற்றுப்பத்து- ஆறாம் பத்துப்பாடல் 53
- மோகன்
No comments:
Post a Comment