Tuesday, October 14, 2025

குறுங்கவிதைகள்

 ஆறுகள்

மணல் கொள்ளையை தடுக்கத்தான்

அந்த ஓட்டம் ஓடுகின்றனவோ!!!


---------

பூனைக் குட்டிகளை

    ஈரத் தரையிலிருந்து

    தான் விரித்தக்

    கோணிச் சாக்கில்

    இடம்பெயரச் செய்தவள்,

    ஞாபகப் படுத்துகிறாள் *நடுங்கிய மயிலுக்கு போர்த்திய மன்னனை!*

---------------

கடுங்கோடைக்கும்

பனை ஓலை விசிறியே

போதுமென்றிருந்த அப்பா

ஒரு பின்பனிக் காலத்தில் 

பனி உறைந்த பேழைக்குள்

இரண்டு நாட்கள் காத்திருந்தார்

*அயல் நாட்டிலிருந்து மகன் வந்து சேரும்வரை!*


-------------

*இளமைக்கே மவுசு!*

இளநீர் ஐம்பது  ரூபாய் 

தேங்காய் இருபது ரூபாய் 

இளமைக்கே மவுசு!

---------------------

*கெமிஸ்ரியில் வெற்றி பெற!*

காம்பஸ் கைவசம் இருந்தும்

வட்டம் போட வாங்கினான்

 அவளது வளையலை; 

 கணக்கு வகுப்பில்....

 *கெமிஸ்ட்ரி வளர்க்க!*

 

 --------------------

 என்ன கவிதை எழுதினாலும் மொக்கை என்கிறாயே 

உன்னையே கவிதை என்றால் என்ன சொல்வாய்?

----------------------

*மனித நேயம்*

பால்கனி மூலையில் உள்ள

குருவிக்கூட்டை கலைக்காமல்

ஒட்டடை அடித்தாள்

சண்டை போட்டு 

தனிக்குடித்தனம் வந்த 

மனைவி!

------------------


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...