Monday, September 15, 2025

வாசிப்பு அரங்கம் மற்றும் இலக்கண வகுப்பு கோலாகல துவக்கம்

 §∆§∆§∆§∆§∆§∆§∆§∆§

*வாசிப்பு அரங்கம் மற்றும் இலக்கண வகுப்பு கோலாகல துவக்கம்!*

§∆§∆§∆§∆§∆§∆§∆§∆§


நமது *மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம்* திட்டமிட்டபடி மாதம் இருமுறை அமரவிருகின்ற வாசிப்பு வட்டமும் நடத்தப்பட இருக்கின்ற தமிழ் இலக்கண வகுப்பும் மிகச் சிறப்பான முறையில் நேற்று  துவங்கின. அதன் விவரணம்:


*சிறுவர் வாசிப்பு வட்டம் – அமர்வு 1 (14-9-2025)*


பங்கேற்றவர்கள் விவரம்:

சிறுவர்கள்

1. செல்வன். ஸ்ரீநிகிதன்

2. செல்வி. ஆராதனா

3. செல்வி. ஜனனி

4. செல்வன்.ஸ்ரீராம்

5. செல்வன். சாய் பிரணவ்

6. செல்வன். மகிழ்மித்ரன்

7. செல்வன்.ஜியோ

8. செல்வன். கௌசலேஷ்

9.செல்வி .நிவர்சனா

10.செல்வி. ஆதிரா

11. செல்வன். அர்மான்

12.செல்வி. அர்ஃபா

13. செல்வன். ஆதவ்

14. செல்வன். அவினாஷ்

15. செல்வன். இளமாறன்

16. செல்வன். ப்ரிதிவ்

17. திரு.சாய்ராம்

18. திருமதி.மகாலட்சுமி

19. திரு.ஸ்ரீவெங்கடேஷ்

20. திருமதி.ராஜேஸ்வரி

21. திரு.கணேசன்

22. திருமதி.வித்யா

23. திருமதி.ஷியாமளா

24. திருமதி.மல்லிகா

25. திருமதி.தேவி

26. திருமதி.மலர்விழி

27. திரு.நாகராஜன்

28. திருமதி.மஞ்சுளா

29. திருமதி. சுல்தானா

30.திருமதி. தனலக்ஷ்மி குமார்

31. திருமதி.லலிதா கிருஷ்ணன்

32. திரு.செல்வன்

33. திரு. வெ. நாகராஜன்.


சிறுவர்களுக்கான முதல் வாசிப்பு வட்ட அமர்வு 14 செப்டம்பர் மாலை 6மணிக்கு கிளப்ஹௌஸ் ஜாமிங்க் ரூமில் இனிதே துவங்கியது. செல்வி ஆராதனா *பனிமனிதன்* (ஆசிரியர் திரு. ஜெயமோகன்) நாவலைப் பற்றியத் தன் அனுபவங்களை அனைவருடனும் சுவைபட பகிர்ந்து கொண்டார். சிறுவர்கள் மிகவும் ஆர்வத்துடனும் பொறுமையுடனும் கவனித்தனர். தொடர்ந்து திரு. சாய்ராம் ஐயாவின் அழைப்பில் பேரில் செல்வன் ப்ரிதிவ் பனிமனிதன் கதையின் முதல் அத்தியாத்தை அழகாக வாசித்தார். பின்னர் நடந்த கலந்துரையாடலில் சிறுவர்கள் பின்வரும் ஆலோசனைகளை முன் வைத்தனர்:


1. கதையைப் படித்து முடித்ததும், ஒரு வினாடி வினா வைக்கலாம்.

2. கதைப் பகிருதலின் போது கதைக்கு தொடர்பான சில படங்களை வைக்கலாம்,

3. கதையை ஒரு நாடகமாக நடிக்கலாம்.


இத்துடன் பலர் பனிமனிதன் கதையை வாசிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்தனர். அதன் படி புத்தகம் வாசிப்பு சுற்றுக்கு அளிக்கப்படும்.

அடுத்தக்கூட்டம் செப்.27–ம் தேதி வைக்கப் படும்.


*பெரியோருக்கான வாசிப்பு அரங்கம் முதல் அமர்வு*


சிறார்களுக்கான வாசிப்பு அரங்கம் முடிந்த பிறகு பெரியவர்களுக்கான வாசிப்பா அரங்கம் துவங்கியது அதில் பங்கேற்றவர்கள்: 

1.தேவி

2.ஸ்ரீவிதயா

3.காமாட்சி

4.மகாலட்சுமி

5.செல்வன்

6.சாய்ராம்

7.ஷண்முக சுந்தரம்

8.லக்ஷ்மி நாராயணன்

9.கணேசன்

10.வே. நாகராஜன்

11.சு. தே. நாகராஜன்

12.ஸ்ரீவெங்கடேஷ்

13.தனலக்ஷ்மி குமார்

14.சங்கீதா

15.ஆர். சண்முக சுந்தரம்.


திரு லட்சுமி நாராயணன் அவர்கள் சுஜாதாவின் பல்வேறு சிறுகதைகளை தொகுத்து வெளியிடப்பட்ட *ஸ்ரீரங்கத்து தேவதைகள்*  எனும் நூலை பற்றிய ஓர் அறிமுகம் செய்துவிட்டு சுஜாதா பற்றிய குறிப்புகளோடு அந்த தொகுப்பில் இருக்கும் *பேப்பரில் பேர்* என்னும் கதையை வாசித்தார் அனைவரும் ரசித்து சிரித்து மகிழ்ந்ததை காண முடிந்தது. சுஜாதாவின் மிக எளிய நடையும்  வாசகர்கள் அனைவரையும் நேரடியாக கதை நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லும் அளவிலான எழுத்து நடையும் மிகச் சிறப்பாக இருந்தன. அதன் பிறகு, அதன் மீது சிறிய கலந்துரையாடலும் நடந்தது குறிப்பிடத் தக்கது. 


*இலக்கண வகுப்பு துவக்கம் - அறிமுக உரையாடல்*


அதன் பின்னர், திரு. ஆர். சண்முகசுந்தரம் ஐயா அவர்கள் தாங்கள் எடுக்கவிருக்கும் இலக்கண வகுப்புகளை பற்றி ஒரு கலந்துரையாடலை நடத்தினார். அதன் அடிப்படையில் இலக்கண வகுப்புகள் பெரியோரின் வாசிப்பு வட்டம் முடிந்தவுடன் நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்டது. தற்சமயத்திற்கு குழந்தைகளுக்கான இலக்கண வகுப்பு என்பதை வாசிப்பு வட்டத்தின் போது இடையிடையே சிறு குறிப்புகளாக குறிப்பிடுவதோடு போதும் எனவும் தனியே நடத்திட வேண்டாம் எனவும் முடிவானது. இலக்கண வகுப்பிற்கு வரக் கூடியவர்கள் தொடர்ந்து வகுப்புகளில் தங்கள் வருகையை உறுதி செய்வது நாம் பல விடயங்களை கற்றுக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்; குறிப்புகள் எடுப்பதும் முக்கியம் எனவும் விவாதிக்கப் பட்டது. ஒரு கரும் பலகையை வைத்து வகுப்பு எடுப்பது – அதற்கான முயற்சியை தமிழ்ச்சங்கம் மேற்கொள்வது 

எனவும் முடிவானது. 


*நல்ல துவக்கம் வெற்றியை உறுதி செய்கிறது*

நேற்றைய அமர்வும் இலக்கண வகுப்பு ஒரு நல்ல துவக்கமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. ஆர்வத்துடன் சிறுவர்களும் பெரியவர்களும் வாசிப்பு வட்ட அமர்வில் இருந்ததும் இலக்கண வகுப்பில் ஆர்வம் காட்டியதும் நல்ல அறிகுறியே. 


*நன்றி கூறுகிறோம்*


இடத்தைக் கொடுத்த உதவிய நமது நலச் சங்கத்திற்கும் (PWOWA) தங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை மிக கவனமாக திட்டமிட்டு அமர்வுகளை நடத்திய திருமதி. ஆர். மகாலட்சுமி மற்றும் திரு. லட்சுமி நாராயணன் ஆகியோருக்கும் இலக்கண வகுப்பினுடைய அறிமுக உரையை ஆற்றி உற்சாகம் கொடுத்த திரு. ஆர். சண்முகசுந்தரம் அவர்களுக்கும், நல்ல விஷயங்களுக்கு எப்போதுமே ஆதரவு தரக்கூடிய நமது தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் வருகைக்கும், கலந்து கொண்ட அனைத்து சிறார்களுக்கும் நமது தமிழ் சங்கம் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கி மகிழ்கிறது.🙏

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...