காக்கைப் பள்ளிக்கூடம்
பேரன் வந்திருந்தான் பெங்களூரில் இருந்து
பெண் வயிற்றுப் பிள்ளை பெருமை பிடிபடாது
கூரை மிசை எதிர் வீட்டில் காக்கைகள் வரிசை
குழந்தையை ஈர்த்ததும் அதிசயமில்லை
" ஆரை எதிர்பார்த்து அங்கு அத்தனை காகம்? " (பேரன்)
அதற்கு நான் " அதுவா? காக்கைப் பள்ளிக்கூடம் "
"சார் அதுவா? " கேட்க "ஆமாம் " என்றேன்
சற்றே தள்ளி ஒரு காகமும் கண்டேன்
ஆத்திலே பண்ண சீடை பாட்டியும் தந்தா
" அருமை " என, அந்தரத்தில் மிதந்தா
நேத்து பொரிந்த குலாப்ஜாமுனும் வந்தது
" நேரிலை வேறு " என, நெகிழ்ந்த மனது
கூத்து முடிந்ததாய்க் காகங்கள் பறந்தன
கொஞ்சம் நான்கைந்து தங்கி இருந்தன
" காத்துக் கிடக்கும் அவை ட்யூஷனுக்கா?" கேட்டான்
காலர் உயர்ந்தது " நானாம் அவன் பாட்டன்!"
__. குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment