*நிர்வாகக் குழு கூடுகை (3) விவரணம்*
20 ஜூலை 2025 அன்று மாலை 6 மணிக்கு விவேகானந்தா பயிலகத்தில் நமது மூன்றாம் நிர்வாகக் குழு கூடுகை நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து உடன் துவங்கிய கூட்டம் தனது நிரலான இரண்டாம் ஆண்டு விழாவிற்கான ஆயத்தப் பணிகள் மற்றும் குழுக்கள் அமைத்தல் குறித்து விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்தின் அடிப்படையில் :
1) *வரவேற்பு குழு* வில் பொறுப்பாளர் : அனிதா (குத்துவிளக்கு எண்ணெய் தெறி பன்னீர் சொம்பு கல்கண்டு இன்ன பிற)
2) *வருகை பதிவேடு உணவு கூப்பன் வழங்குதல்* : மஞ்சுளா அண்ட் கோ
3) *தொகுப்பாளினி மற்றும் உதவி:* மகாலட்சுமி,
சிவகாமி,
ஸ்ரீவித்யா, அமுதவல்லி
4) *அரங்க நிர்மாணக் குழு:* ஸ்ரீவி, சாய்ராம் தியாகராஜன் ஹரிஷ் நாகராஜ்
5) *தேனீர் பிஸ்கட் தண்ணீர் வழங்குதல்:* நாகராஜ், ஹரிஷ் & சுபாஷினி மற்றும் பிறர்
6) *உணவு வழங்கல்:* நாகராஜ் ஹரிஷ் மல்லிகா மற்றும் பிறர்
7) *எஸ் பி எம் ஐயா பிக்கப் & ட்ராப்:* லட்சுமி நாராயணன்
8) *விருதுகள் புத்தகங்கள் வழங்குதல்* பொறுப்பாளர் :
ஸ்ரீவி & தியாகராஜன் உதவி : ஸ்ரீவித்யா & அமுதவல்லி
9) *வேன் பொறுப்பு:* மல்லிகா, ஸ்ரீவித்யா
10) *டிஸ்போசபல் பைகள்:* நாகராஜன் (வாங்கி விட்டார்)
11) *பேனர் செய்தல் பொறுப்பு :* காமாட்சி (தனது சொந்த செலவில் செய்து விட்டார் )
12) *பேனர் ஸ்டாண்ட் பொறுப்பு:* தியாகராஜன் (வாங்கி விட்டார்)
13) *பிஸ்கட் வாட்டர் பாட்டில் பொறுப்பு:* ஹரிஷ்
14) *பாட் காஸ்ட் மடிக்கணினி மற்றும் பிற* - பொறுப்பு: ஸ்ரீவித்யா.
ஆகிய குழுக்கள் அமைக்கப் பட்டன. பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டனர்.
பேனர் செய்ய உதவியதோடு அதற்கான செலவை முழுமையாக ஏற்றுக் கொண்ட காமாட்சி அவர்களுக்கு நமது நன்றிகள்.
அழைப்பிதழை வடிவமைத்துக் கொடுத்த ஹரிஷ் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களை தயார் செய்த அமுதவல்லி இருவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.
அதன் பின்னர், நமது தமிழ் சங்கத்தின் சார்பாக நமது நல சங்கத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் விவரங்களை தலைவர் பகிர்ந்து கொண்டார். பிற உறுப்பினர்களும் நமது நடவடிக்கை குறித்து மின்னஞ்சல் அனுப்புவதாக கூறியுள்ளனர்.
நன்றி உரை திரு வே. நாகராஜன் அவர்கள் வழங்கினார்.
நாட்டுப்பண் இசைக்கப் பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
ஸ்ரீவி
தலைவர்
No comments:
Post a Comment