ஏமாறும் பலரும் இங்கே இருக்கும் வரை
ஏமாற்றுப்பேர்வழிக்கு இல்லையே குறை
பூமாலை போலே சூட்டுவார் புகழாரம்
புதைந்து நெஞ்சினில் ஏதோ இருக்கும்
சாமான்கள் தருவேன் மலிவாக என்பார்
சத்தமின்றி இரவில் கரைந்து போவார்
மாமா, மச்சான் உறவென நெருங்குவார்
மனதினில் ஏதோ காயும் நகர்த்துவார்
"கோமேதகம் உண்டு வேண்டுமா?" கேட்பார்
கூழாங்கல் கொடுத்து குருவியாய்ப் பறப்பார்
காமசுந்தரியுடன் நடிக்க வைப்பேன் என்பார்
கைப் பையில் கிடைத்ததைச் சுருட்டி ஓடுவார்
"ஆமாம், ஆமாம்" என்றே பின்னே தொடருவார்
அவரும் ஏமாற்றவே அவ்வாறு செய்கிறார்
நாமாக விழிப்புடன் இருப்பதே நன்றாம்
நம்பிக்கை, நாணயம் நடைமுறையில் அன்றாம்.
__. குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment