முட்களைப்
புரிந்து கொள்ள
புத்தியே போதுமானது!!
ஆனால்
பூக்களைப்
புரிந்து கொள்ள
இதயம் வேண்டும்!!!
- ஓஷோ
---------------------------------------------------------------------------------------------
பார்வைகள் பலவிதம்
புத்தியின் கண்களுக்கு முள்களே தெரியும்
பூவை, மென்மையை மனமே அறியும்
பத்தினியின் கண்கள் குறைகளைத் தேடும்
பல்லிடை வெண்டையாம் கணவன் பாவம்
சத்தியம் பார்வையில் எல்லாம் சமமாகும்
சாட்சி கண்டு சட்டமோ முடிவு சொல்லும்
அத்திப்பழம் பார்க்க ஆவலைத் தூண்டும்
அதனுளே அத்தனையும் புழுக்களாகும்
கத்தி முகத்தில் கண்களே இல்லையாம்
காயோ, விரலோ வெட்டித் தள்ளுமாம்
" சித்தி " தொடர் பாரா கண் இங்கு துஞ்சா
சீனக் கண்களுக்கு தப்பும் ஓர் உயிரா ?
குத்துச்சண்டையில் கோபமே கண்களாம்
குடும்பம் நடத்த கோலவிழிப் பெண்களாம்
அத்தை மகனின் தோற்றம் அந்த மன்மதனாம்
அவ்வாறே மாமன் மகள் அழகு ரதி ஏனாம்?
__. குத்தனூர் சேஷுதாஸ்
---------------------------------------
பூக்களைப் புரிந்து கொள்ள
இதயம் போதுமானது..
ஆதாயகங்களைத் தேடாத
இதயங்களை அறிந்துகொள்ள
வேண்டியது யாதோ??🤔
- சங்கீதா
-------------------------------------------------
சில முட்கள் காலம் காட்டும்
சில காலை வாட்டும்.
சில ,மலருக்கு பாதுகாப்பு ஊட்டும்
இருக்குமிடம் தெரிந்தால் அவை செய்யும்
பணியின்புரிதல் எளிது.
ஆனால் பூக்கள் அப்படி அல்ல.
மண விழாவிலோ
பிண ஊர்தியிலோ
பூங்காவில் உதிர்ந்து கிடந்தாலும் கூட இடத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற
உணர்வுகளை ஊட்டும்.
முள்ளும் மலராகலாம்
இதயம் இருந்தால்.
---மோகன்
No comments:
Post a Comment