எல்லாம் கணக்கு
கனி தரும் தருவுக்குப் பின் காரணம் உண்டு
கணக்கு தன் இனம் அதனால் பெருகுமென்று
வனிதையர் பூச்சரம் தலையில் சூடிக் கொள்வார்
வாசம், நிறம் காட்டி வளர்க்க செடி வைக்குது
சுனையில் குளிர்ந்த நீர் சுரந்து பெருகுது
சும்மா அது ஓரிடத்தில் இருக்க முடியாது
மனிதன் கிடைக்குதென பயன் படுத்துகிறான்
மரம், மலர், சுனைக்கு மகுடம் சூட்டுகிறான்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment