Friday, April 4, 2025

எல்லாம் கணக்கு

 எல்லாம் கணக்கு


கனி தரும் தருவுக்குப் பின் காரணம் உண்டு

   கணக்கு தன் இனம் அதனால் பெருகுமென்று


வனிதையர் பூச்சரம் தலையில் சூடிக் கொள்வார்

   வாசம், நிறம் காட்டி வளர்க்க செடி வைக்குது


சுனையில் குளிர்ந்த நீர் சுரந்து பெருகுது

   சும்மா அது ஓரிடத்தில் இருக்க முடியாது


மனிதன் கிடைக்குதென பயன் படுத்துகிறான்

   மரம், மலர், சுனைக்கு மகுடம் சூட்டுகிறான். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...