வாழ்வியல் நிலை
நகைச்சுவையாய்
பகிரப்பட்ட நம்
பிழைக் குறும்பு
நம் பின்னால்
பிம்பமாய் மாற்றப்பட்டிருக்கும்.
அன்பின் பொருட்டு
இர(ற)ங்கி போன
நாட்களால்
எழும்ப முடியாமலே
போயிருக்கும்.
புரியவைக்க முடியாமல் போன
நம் பயணப்பாதைகள்
நமக்கான சுயத்தின்
வீரியத்தை குறைத்திருக்கும்.
அனைவருக்கும் இலகுவான ஒன்று நமக்கு இல்லாமலே போயிருக்கும்.
ஆனாலும் என்ன?
நடந்து கொண்டே இருப்போம்.
எல்லோருக்குமான
பாதைகள்
என்றாவது ஒருநாள்
புரிதலின் புள்ளியில் சந்திக்கும்
என்ற நம்பிக்கையோடு...
ராஜேஸ்வரி.ந
16/4/2025
No comments:
Post a Comment