ஒரு காப்பி பிரியரின் காப்பியாயணக்
காப்பியம்
-----
முதலில் செவி வழிச்செய்தி:
வெள்ளைக்காரன் அறிமுகம்
செய்த அமுத(?) பானம்.
முதலில் எல்லோருக்கும் அருமையான காபி , இலவசமாக,வேலையில்லா இளைஞரைக்கொண்டு, ஒரு மாதம். பிறகு
கடை மூடப்படும். சுவை கண்ட
நாக்குகள் தவிக்கும்.
" கிட்டா "தொற "( துரை) கடைய மூடிட்டாண்டா !" போன்ற அதிர்ச்சிப்புலம்பல்கள்! இரண்டு
மாதம் கழித்து, திரும்பவும்
கடை திறக்கும், ஆனால் பானம் வாங்க காசு கொடுக்க வேண்டும்!
ருசி கண்ட நாக்குக்கும் பணப்பைக்கும் நடக்கும் போரில்
நாவே வெல்லும்.இப்படித்தான் காபி நம்மை ஆட்கொண்டது.
" டிகிரி காபி:
இது degree காபி; decree காபி அன்று.
பாலின் சூடு , தரமான காபி போட, 12degree இருக்க வேண்டுமாம். இதற்கான வெப்ப மானிகள் இருந்ததாக அறியப்படுகிறது.
நுரை:
மிக முக்கியமான அம்சம் , நெற்றித்திலகம் போல.
⁃ சூட்டைப் பாதுகாக்க
⁃ பாலாடை( creamy) மற்றும் வடிவமைப்பை( texture) தர
⁃ லாத்தே( latte) போன்ற பானங்களில் நுரையின் மேல் அழகிய வடிவங்களை எழுதுவார்கள.
⁃ இந்தக்கலையைக்கற்க
⁃ " Barista" வகுப்புகள் உண்டு.
சான்றிதழும் தரப்படும்.
நம்ம ஊரில் இது இல்லாமலே
காபி மாஸ்டர் பட்டம் பெற்றவர் ஏராளம்.
இப்போதெல்லாம் சரக்கரை வேண்டுமா என்று கேட்டு வீட்டிலோ வெளியிலோ காபி தயாரிக்கப்படுகிறது. உடம்புகள்
சர்க்கரை மூட்டைகளான பின் என் செய்ய, பராபரமே!
பித்தளை டபராவுக்கும், டம்ளருக்கும் அரை, முக்கால் முழத்துக்கு , சிந்தாமல், சிதறாமல் ஆற்றி பாங்காக நமது
மேசையில் வைத்த பரிமாறும்
சேவையாளர் எங்கே மறைந்தனரோ?!
ஆற்றாமல் , சூடாக ஒரு கோப்பை காபி குடித்து மன ஆற்றாமையை
ஆற்றிக் கொள்ள வேண்டியதுதான் போல!
No comments:
Post a Comment