Wednesday, April 2, 2025

பளிச்சென...

 பளிச்சென... 


உலகு என்றும் என்னை ஓரம் கட்டாது

   உம்மணா மூஞ்சியும் நகைக்கத் தவறாது


வலதை இடதாய்க் காட்டி வம்பு செய்வேன்

   வாயாட பேச்சாளரை வளர்த்திடுவேன்

   

திலகம் இட்டுக் கொள்ள உதவி செய்வேன்

   தினமும் வஞ்சியரைக் கெஞ்ச வைப்பேன்


புலியே எதிரே வந்தால் புறமுதுகு காட்டேன்

   போட்டியாய் வேறொரு புலி நிறுத்துவேன் 


எலி வந்தால் நேரே ஏளனம் செய்யேன்

   எல்லோரும் அழகு என்றே சொல்வேன்


மலையையும் என்னுள் அடக்கிக் காட்டுவேன்

   மங்கலப் பொருள்களில் நானும் ஒன்றாவேன்


புலவன் போல் ஒருநாளும் பொயுரைக்க மாட்டேன்

   பூவையரே அழகென்பான் அதுவும் அறிவேன்


பலவாம் பயன்கள் இவ்வாறு என்னால்

   பரவசம், பளிச்சென " கண்ணாடி " என்றால். 


__  குத்தனூர் சேஷுதாஸ்


-------------------------------------------

என் பெயர் கண்ணாடி 

வந்து நில் என் முன்னாடி,     

உன்னை பிரதிபலிப்பேன் உள்ளபடி...     

ஏனென்றால் எனக்கு பொய் சொல்ல தெரியாது          

வஞ்ச புகழ்ச்சி முடியாது  

உண்மையை மட்டுமே உரைப்பதால்           

நானும் காந்தி தான்  

என் பெயர் கண்ணாடி.


--சந்திரசேகரன்

-------------------------------------------



No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...