வேம்பின் வினா
வேப்ப மரம் நம்மிடையே பூத்துக் குலுங்குதாம்
வெல்லப் பச்சடி பண்ணி உண்ணச் சொல்லுதாம்
தோப்பாய் இருந்ததாம், துடைத்து விட்டோமாம்
தொற்றுநோய்கள் வரத் தாழ் திறந்தோமாம்
கூப்பாடு போடுது குயில் "குந்துவேன் எங்கே? " என்று
" குளுகுளுவென எவ்வாறு வீசுவேன்? " இது காற்று
" காப்பார் மனித குலம் இனி யார்? " தரு கேட்குது
கவலை இலா நம் குலம் கவிதை ஏதோ எழுதுது.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment