*குழந்தைத் தொழிலாளி*
நகக் கணுக்களில் பட்டாசுகளின் கந்தகத் துகள்கள்
உணவகங்களிலோ உள்ளங்கைகளின் அழுக்குக் கறைகள்
வீட்டின் வருமானம்
முதுகில்
சுமையாய்.
பொறுப்புகளே பள்ளிப் பைக்குப் பதிலாய்...😞
--உங்கள்_தோழன்_ஸ்ரீவி
*****************************************
குழந்தைகள் பாரீர் !
கிழிந்த உடை இனியும் கிழிய இடமில்லை
கிள்ளை ஒன்று விற்கிறதாம் கூடையில் கீரை
அழிந்த பொட்டுக்காரி ஆத்தாவுக்குத் துணையாம்
அப்பனைச் சாராய வெள்ளம் அடித்துப் போனதாம்
வழியும் வியர்வையதை துடைத்தபடி ஒரு குழந்தை
வாடுதாம் தொடுத்து பல வண்ணப் பூமாலை
கழைக் கூத்தில் ஒரு கருங்குயிலும் உண்டாம்
கயிற்றுமிசை நடந்து கைதட்டல் பெறுதாம்
அழுக்கே மெய் எங்கும் கவசம் போல் ஆனதாம்
அக்குழந்தை, அம்மா பட்டாசுப் பணியிலாம்
குழிந்த விழிகள், குடியிருப்பது வீதியில்
குழந்தையைச் சுற்றிலும் தீய சக்திகள்
குழைத்துப் பிசைந்த பாற்சோறு இந்தப் புறம்
கொடுக்கக் கைபேசி பின்னரே வாய் திறக்கும்
அழைக்கப் பள்ளிப் பேரூந்து இக் குழந்தை ஓடுதாம்
அமெரிக்காவிலது மாடாய் உழைக்கப் போகுதாம்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
****************************
ஏழைத் தொழிலாளி
------------------
வருடம் முழுவதும் பட்டாசு செய்வான்.
தீபாவளி அன்று தெரு
வாண வேடிக்கை இவனுக்குவாடிக்கை
பட்டாசு விலைகள
ராக்கெட்டை நினைவூட்டுமே!
இவன் போராடுவது
கந்தகத்தோடு
கண்டும் காணாமல்
இருக்கும் அரசும்
தொழில் அதிபர்களும்
அந்தகரோ!
சிறார் தொழில் புரிவது
குற்றம் என்கிறது சட்டம்
ஆயினும் அதைத் திட்டம் போட்டு தகர்க்கும் கூட்டங்கள்
ஏராளம், ஏராளம்.
மற்றவரை மகிழ்விக்க
வியர்வை சிந்தும்
இவன் கண்கள்
நீர் சிந்துவது என்று நிற்கும்?
- மோகன்
No comments:
Post a Comment