இரயில் பெட்டி ஏற வந்தாளோ இந்த மஞ்சள் பூ?
இவள் வாயில் விரிந்த
புன்னகைப் பூ
சொல்லும் கதை அறிவீரோ?
புது உலகம் காணப்
புறப்பட்டாளோ?
அல்லது
தாத்தா பாட்டி மடியில்
உறங்கி உறவுப் பிள்ளைகளோடு
உறவாடி விளையாடலாம் என முகத்தில்
மலர் வில்லை
ஏந்தினாளோ?
இவள் பள்ளி இன்று பூட்டிக் கொண்டு வழி விட்டதோ?
இவளின் பிஞ்சு வெண்டை விரல்கள் "டா டா" சொல்லி
ஐந்து நாள்கள் விடுமுறை
என சூசகமாய் யாருக்கு அறிவிப்பு செய்கின்றன?
- சாய்கழல் சங்கீதா
------------------------------------------
வீட்டுப் பாட தொல்லைகள் இல்லை..
பாட்டி வீட்டுக்குப் போகின்றேன்..
காலை எழுந்து பரபரப்பாய்க் கிளம்பி
பள்ளிக்கு ஓட வேண்டாம்
தாத்தாவிடம் நான் போகின்றேன்.
அம்மா ஆஃபிஸில் இருந்து வரும்வரை
காத்திருக்க வேண்டாம்.
ஆசையான தாத்தா பாட்டி எப்போதும்
இருப்பார்கள்.
எக்ஸாம், வீக்லி டெஸ்ட், அசைன்மென்ட் தொந்தரவு ஏதுமின்றி
ஜாலியாய் இருக்கலாம்.
தோட்டத்தில் பறித்து இளநீர் குடிக்கலாம்
சுழன்றோடும் ஆற்றில் ஆனந்தமாய்க் குளிக்கலாம்
ஆத்தங்கரையில் மணல்வீடும் கட்டலாம்
கூவும் குயிலோடு சேர்ந்து நானும் கூவலாம்
ஆனந்தமான ஒருவாரம்
உல்லாசம் நோக்கிப் பயணம்
போய் வருகிறேன்
டாட்டா... பைபை..
*உங்கள் தோழன் ஸ்ரீவி*
-------------------------------------------
ஒரு *ராணுவ வீரன்* *தந்தையின்* குரல்
தொடரும் வாழ்க்கைப் பயணத்தில்
இந்தத் தொடரியின் பயணம்
இதயத்தில் கணக்கிறது
*மஞ்சள் தேவதையே*
பை(bye) பா என்று நீ கூறும் போது
பயப்படாதே பா
நான் உனக்காக வேண்டிக்கொள்கிறேன்
என்பது போல் உள்ளது
யுத்த பூமியை நோக்கிச் செல்லும் என் உடல்
ஏனோ உயிரை இங்கே விட்டு விட்டுச் செல்கிறது
ரத்தமும் ரணமும் உடலுக்குத்தான் உன் உயிர்
பத்திரமாக என்னிடம் உள்ளது போய் வா என்று நீ சொல்வது போல் தோன்றுகிறது
*மஞ்சள் நிலாவே* மகளே
மனக்கோட்டைகள்
பல கட்டியுள்ளேன்
பல மேடைகளில் நீ மெச்சப்படுவாய்
கஷ்டங்களை துச்சமாக எண்ணி கடந்து விடுவாய்
என்றெல்லாம்
கைகாட்டி விட்டு தொடரியில் உட்கார்ந்த எண் எண்ண ஓட்டம் தொடர்கிறது
*மஞ்சள் மலரே* நீ மலர்ந்து மங்கையான பின்
மனம் விரும்பிய கணவனுக்கு உன் கரம் பிடித்துக் கொடுப்பேனோ
நினைக்கும் பொழுதே
நெஞ்சிலே சுகம்
கொஞ்சம் பொறுமகளே
அடுத்த விடுமுறையில் வந்து விடுவேன் வேகம்
- ஸ்ரீவித்யா வெங்கடேச்வரன்
-----------------------------------------------------
பள்ளி விடுமுறைக்கு வந்து
தன்னுடன் விளையாடி மகிழ்ந்த
அத்தை/மாமன் மகள்/மகன்களுக்கு
மகிழ்ச்சியுடன் வழியனுப்போ?
- முகம்மது சுலைமான்
No comments:
Post a Comment