உலக மூங்கில் தினம்
----------------------
ஓங்கி உயர்ந்து
காற்று மாசுகளைக்குறைக்கும்
இயற்கை மருத்துவர்கள்.
புல்லாங்குழல்களாக
தம்மூடே இன்னிசை
பாய்ச்சி செவிக்கு
இன்பமூட்டும் இயற்கையின் பிறப்புகள்.
மணப்பந்தலோ
மனிதனின் இறுதி
ஊர்வலமோ
பாரபட்சம் இன்றித்
தம்மைப் பயன்படுத்த
உதவும்தத்துவ ஞானிகள்.
கூட்டமாக வளர்ந்து காற்றில் உராசி ஒலி எழுப்பினாலும் சுருதி பேதமின்றி ஒற்றுமை
காட்டும் மூங்கில் நண்பர்களை இன்று
நன்றியுடன் நினைவு
கூர்வோம்.
- மோகன்
--------------------------
புல்லாங்குழல் தரும் மூங்கில்
புல்தான் என தாவரவியல் சொல்கிறது
ஓங்கி உயரும் புல்லே
மூங்கிலாம்
வீடு கட்ட சாளரமாகும்
கூரைதனை தாங்கி நிற்கும்
ஏணியாய் மாறி மேலேற உதவும்
கோவில் வாசலில்
கடவுளர் உருவமாகி
வண்ண விளக்குகளில் மின்னி ஒளிரும்
ஞாலத்திலிருந்து
விடைபெறும் நாளில்
தூக்கிச் செல்லவும் உதவும்.
மனிதா,
மூங்கில் போல்
வாழ்வில் ஓங்கியுயர்தல்
வளர்ச்சியைக் காட்டும்.
மூங்கில் போல்
பிறருக்குப்
பயன்பட்டால்
நேயத்தைக்
கூட்டும்.
*மூங்கில் தின வாழ்த்து*
- ஸ்ரீவி
----------------
உலக மூங்கில் நாளில்...
ஓங்கி எம் சிந்தனை உனைப் போல் வளரணும்
ஒன்றாக இருப்பதையும் உன்னிடம் கற்கணும்
தாங்கிப் பொருளை தூக்கிச் செல்ல உதவுவாய்
தரை இருப்பாரை மேலே ஆசிரியராய் ஏற்றுவாய்
தூங்க நிழல் தந்து சோம்பலை ஊக்குவதில்லை
துளையிட்ட குழலாய் மயக்கத் தவறியதில்லை
மூங்கிலே ! உன் நாளாம் உலகம் இன்று கொண்டாடுது
மூச்சு போனவர்க்காக நாளும் உனை துண்டாடுது.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment