பெண்குழந்தை தினம் (24, ஜனவரி)
துள்ளி வரும் நேரம் முயலாம், மானாம்
துளைத்தெடுக்கும் போது வண்டாம், அம்பாம்
கள்ளமில்லா உள்ளமது பஞ்சாம், பாலாம்
கழுத்தைக் கட்டும் போது கரும்பாம், கனியாம்
தள்ளி மணம் முடிந்து போகும் அந் நேரம்
தாரைகளாய்க் கண்ணீர் கொட்டும் வானம்
கள்ளிப் பால் முற்றிலும் வற்றிப் போகட்டும்
கண்மணியாம் பெண் குழந்தை காக்கப் படட்டும்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
---------------------------
பெண் குழந்தை தினம்
----------------------
உறவுகளைப் பாசத்தால்பிணைக்கும்
மலர்க்கொடியாம் பெண் குழந்தை
இறைவன் மனநிறைவோடு இருக்கும் தருணத்தில்
அருளிய வரமாம்
கண்கள கருவண்டாக
சுற்றிச் சுழல, இவர்கள்
பார்த்தாலே பசி தீருமாம்
கால்களின் கழல்கள
கிண்கிணி ஓசை எழுப்பும் இவர்தம்
நடை அழகின் தேரோட்டமாம்
பூவிதழ்கள் சற்றே பிரிந்து உதிர்க்கும்
மழலை ஈன்றோர்
காதுகளில் இன்பத்
தேனைப் பாய்ச்சுமாம்
பெண்ணுக்குப் பெண்ணே யமனாக அமையும்"கள்ளிகள"
மனம்மாறி,"சுட்டும் விழிச்சுடர் கண்ணம்மாக்கள் "நிறைய உருவாக
இன்று பிரார்த்தனை
செய்வோமாம்
காத்திருப்போம், காலம் மாறும்!
- மோகன்
தெய்வத்தின் அருள் பெற்றால் பிறப்பது ஆண் குழந்தை (இது அறியாதோர் வாக்கு)........
தெய்வமே குழந்தையாய். பிறப்பது தான் பெண் குழந்தைகள்.....(இது அனுபவித்தவர் வாக்கு)....
😊 சாயி 😊
No comments:
Post a Comment