கல்வி -- அன்றும், இன்றும்
அல்வா போல் கல்வி ஆரம்பத்தில் இனிக்காது
அடுத்த கட்டம் போனால் என்றும் திகட்டாது
செல்வம் போல் கல்வி களவாட முடியாது
சேர்ந்தால் மாமியார், மருமகள் போலது
கல்விக்கு அதிகாரம் தனியே வள்ளுவன் வைத்தார்
கற்றார் முகத்தில் தான் கண்கள் என்றார்
பல்கலைக்கழகங்கள் பல்லாயிரம் ஆண்டு முன்பாம்
பாரதத்தில் பல இருந்தன சான்றுகளும் உண்டாம்
நல் விளக்கு என்றார் கல்வியை முன்னோர்
நான்குடன் அறுபது (64) கலைகள் கற்பித்தார்
தொல்காப்பியம், இலக்கியம், வேதம்.. என நீளும்
தொன்மை, செழுமை இவை போல் உண்டா ஏதும்?
பல் துலக்கா பிராணிகள் சில இங்கு கூறும்
பரங்கியர் தந்ததே கல்வி என்ற பொய்யும்
நல்வழிப் படுத்தலே கல்வி அன்று செய்தது
நான்கிலக்கம் (OTP) சொல இன்று எல்லாம் பறிபோகுது.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment