தேடித் தேடொனா
மனித நேயத்தை
என் உள்ளே,
தேடிக் கண்டு கொண்டேன்
-- ஸ்ரீனிவாசன்
*------------------*
திரவியம் நாடி
தேடித் தேடி
ஓயாமல் ஓடி
ஓய்வைத் தேடி
ஓயும் வேளை..
கடையிலும் கிட்டா
மருந்தைத் தேடி..
அலட்சியம் செய்த
அன்பைத் தேடி..
பாராமல் விட்ட
பாசம் தேடி..
பிடித்ததை உண்டு
பிடித்ததை செய்து
பொழுதுகளைப் புதையலாய் நினைக்கும் வேளையிலே..
தேடி வருவான்
ஒரு தூதன்!
தேடலை முடித்திடவே..
இதுவரையிலும் தேடாத
மிச்சமில்லா நொடி அதுவே!
அதுவரை தேடலாம்..
உலகிலுள்ள உன்னதங்களை...
- சாய்கழல் சங்கீதா
*----------------------*
எனக்குள் ஒரு தேடல்....
"நான்" யார் என்ற தேடல்.....
விடைகொடுத்தது என் தேடல்......
"நான் " நான் இல்லையென.....
😊 சாயி 😊
*------------------*
மனைவிக்கு தெரியாமல் அடுப்படியில் சில்லறையைத் தேடல் (பழைய காலத்தில்), அம்மாவிற்கு தெரியாமல் பல காரத்தை தேடல்,பழைய காதலின் நினைவான பரிசு பொருளை தேடல்,அறிவு பசிக்கு நூல்களை தேடல், திருவிழா கூட்டத்தில் தவற விட்ட குழந்தையை தேடல்,தாயை பிரிந்த குட்டி யானையின் தேடல்,முட்டை முந்தியா கோழி முந்தியா ?வினாவிற்கு விடை தேடல்,ஞானத்திற்கு ஆன்மீகத் தேடல்,இன்றைய உலகில் மனித நேயம் தேடல்! இப்படி தேடல்களில் எந்த தேடல் சிறந்தது என்று தேடுவேன்? கூகுளிலும் தேடி விட்டேன்!தேடல் முடியவில்லையே!!
- நாகராஜ்
*---------------*
கவிதையில்
வெண்பாவைத் தேடினேன் கிடைக்கவில்லை
ஆசிரியப்பாவைத் தேடினேன் கிடைக்கவில்லை.
தலைவரின் முயற்சியால்,
அவரின் பயிற்சியால்
தேடிய *தேடல்* *கிடைக்குமே*!!..
-முத்துராஜா
*-----------*
No comments:
Post a Comment