★०★०★०★०★०★०★०★०
*அன்னை எப்போது சாப்பிடுவாள்...!*
★०★०★०★०★०★०★०★०
பண்டிகை ஒன்று வந்து விட்டால்
கொண்டாட்டங்கள்
சேர்ந்து வரும்
உண்டு மகிழ்ந்து இருந்திடவே
கொண்டு வருவாள்
நம் அன்னை.
தும்பிக்கையானை துதித்திடவே
கொழுக்கட்டையும் செய்திடுவாள்
சக்கரை நோய் தாத்தாவிற்கு
உப்புக் கொழுக்கட்டை
உடன் வருமே
கருக்கலில் எழுந்து
சமையல் செய்து
வாய்க்கு உருசியாய்
நாம் உண்ண
தேனீ போல பணி செய்வாள்
பெரியவர்களோடு
குழந்தைகளை
அமர வைத்துப் பரிமாறுவாள்
ஆற அமர நாம் உண்ண
அழகாய் விருந்து படைத்திடுவாள்
அதெல்லாம் சரி..
*அன்னை எப்போது சாப்பிடுவாள்..?*
- ஸ்ரீவி
-----------------------
பிள்ளையாருக்கு படைப்பதைவிட....
யார் பிள்ளைக்கும் அன்புடன் ஆக்கி படைப்பவளே.....
அன்னை அன்றோ
🙏 சாயி 🙏
-----------------------------
தாய்/ தந்தை..இக்கால தந்தையை எண்ணி எழுதியது
------------------------------------------------------------------------------------
உள்ளம் துள்ளும் வரும் பண்டிகை காலம்
விருந்து படைக்க சந்தையே வாங்கி வருவீர்
சிறார் விரும்பியதைத் தேடித் தேடிப் பிடிப்பீர்
பெரியோர் தேவையை அறிந்து பூர்த்தி செய்திடுவீர்
விருந்து சமைக்க துணைக்கு துனண நிற்பீர்
அனைவரின் உள்ளமும் உயிரும் ஒன்றாய் மகிழ்ந்திட
எங்கள் கொணடாட்டத்தையே கொண்டாட்டமாக கொள்ளும் நீயும் அன்னையே!
- சுல்தானா
-------------
கோகுலாஷ்டமியா...
மகனே கண்ணன்!
மகளே இராதை!
தலைவாசல் முதல்
பூசை அறை வரை
தன் மகனின்
அரிசி மாவுப் *பாதங்களை*
அச்சேற்றும் அன்னை அவள்..
கணவனல்ல கண்ணன்!
காரடையான்/ கெளரி நோன்பா....
கணவனின் ஆயுள் நீள உண்ணா நோன்பும் நீளுமன்றோ!
கணவனே கண்கண்ட தெய்வமன்றோ!
வாதங்கள் செய்யாமல்
*பாதங்கள்* தொட்டு
வணங்குவாள் அன்றோ!(அன்று மட்டும்😀)
இவள் பெண் அன்றோ!
இவளை முழுமையாகப்
புரிந்து கொண்டவர்
புவியில் உண்டோ!?
- சங்கீதா
------------------------
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொருவருக்கும்
பார்த்து பார்த்து
செய்வாள் அம்மா
பண்டிகை என்றால்
கடவுளுக்கும் சேர்த்து
பார்த்து செய்வாள்
அம்மா
பள்ளிக்கு விடுமுறை
அலுவலுக்கு விடுமுறை
அம்மாவுக்கு அன்று
கூடுதல் வேலை
சில அம்மாக்களுக்கு
வேலைதான் ஊக்கம்
முத்தான வியர்வையில் கூட
முகமெல்லாம் புத்துணர்ச்சி
சில அம்மாக்களுக்கு
அயர்ச்சி தான் என்றாலும்
அன்பாலும் ஆசையாலும்
முகமெல்லாம் மலர்ச்சி
மலர்ச்சி பழகியதால்
தெரிவதே இல்லை
அயர்ச்சி ஆசை
ஏக்கங்கள்...
வேலை பகிர்ந்து
மனதும் பகிர்ந்து
கொண்டாடும் பண்டிகைகள்
மேலும் சுவை கூடின
பகிர்ந்து பன்மடங்கான
அன்பு வெள்ளத்தால்....
- அமுதவல்லி
No comments:
Post a Comment