சுருக்கு போட்டும் உயிர்
வாழ்கிறது.......
ஊசி போட்டால் உயிர்
விடுகிறது,...
*பலூன்!*
- தியாகராஜன்
----------------------
சுருக்கால் வாழும் உயிர்
சுருங்கினால் போகும்
உயிர்
..பலூன்
- அமுதவல்லி
------------------------------
உணவை சுருக்கினால் வாழும் உயிர்
நீரின்றி/காற்றின்றி சுருங்கினால்
போகும் உயிர்
- சங்கீதா
-------------------------
நாதஸ்வர வித்துவான் ஊதும் காற்றால் வருவது இசை!
பொற்கொல்லர் ஊதும் காற்றால் வருவது நகை!
பலூன் வியாபாரி ஊதும் காற்றால் வருவது சிறுவர்களுக்கு புன்னகை!
இவை வெறும் காற்றல்ல அவர்தம் குடும்பத்திற்கு உயிர் காற்று!
சிகரெட் குடிப்பவர் ஊதும் காற்றால் வருவது புகை;
அது நமக்கு பகை!!!
- நாகராஜ்
No comments:
Post a Comment