மப்பும், மந்தாரமாய்...
மப்பும், மந்தாரமாய் நாலைந்து நாளாம்
மழையது " இதோ இதோ " ஏமாற்றுதாம்
தப்பித் தவறியும் இலைகள் அசையவில்லை
தமிழாய் வருடும் தென்றலும் இல்லை
உப்பு வியர்வை பெருகி உடல் மிசை பூத்தது
உப்பு மாங்காய் அன்று ஊரில் பார்த்தது
துப்பு கொடுங்களேன்! பிரதீப் ஜான்! ஐயா!
துயர் தீர மழை மேகம் அண்மையில் உண்மையா?
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment