நற்சுனை 22
இலவசமாய்...
கீரை ஆய்ந்து கொடுத்தார் பாட்டி
கீரைக்குழம்பு செய்தார் அம்மா
பால் வாங்கி வந்தார் தாத்தா
சுகர் ப்ரீ போட்ட காபியை கொடுத்தார் பாட்டி
தாத்தாவின் துணிகளை இஸ்திரி போட்டு வாங்கி வந்தார் அப்பா
அப்பாவுக்குப் பிடித்த புத்தகத்தை தேடி வாங்கி வந்தார் தாத்தா
பாட்டிக்கு தைலம் தேய்த்துவிட்டாள் அக்கா
அக்காவின் தலைமுடிக்கு சாம்பிராணி போட்டார் அம்மா
அக்காவின் குழந்தை கக்கா போய்விட்டது
துடைத்துவிட்டேன் நான்..
புன்னகை சிந்தியது குழந்தை..
அழுத குழந்தையை தூளியில் எட்டிப் பார்த்தேன்
எந்தப் பணிவிடையும் செய்யவில்லை
இப்போதும் புன்னகையைப் பூப் போல் உதிர்த்தது
அதே புன்னகை!
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment