மனமலையுமே திக்கு திசையற்று...
கடிவாளமிடு எதிலேனும் கவனமுற்று ..
வீழும் ஒருநாள் மெய் - பொருளற்று...
மெய்ப்பொருள் விளக்கிடுமன்று அக்கொடுங்கூற்று..
மாயவலையது, உணர்ந்திடு சற்று..
பற்றிக்கொள் எதையேனும் பற்றற்று ...
பற்றியதில் மெய்மறந்து இன்புற்று ..
வலையில் சிக்காது - நீ சுற்று ..
உற்றவன் கழலடி பின்பற்று..
கடந்திடு கடலை தடயற்று..
என் - படைப்பென்று ஒதுக்காதே, சலிப்புற்று,..
இதுவே பொய்யாமொழியின் கூற்று.. ..
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் -
பற்றுக பற்று விடற்கு"
- இலாவண்யா
******************
No comments:
Post a Comment