*கொசுக்களின் குமுறல்*
மீட்டருக்குமேல் துட்டுவாங்கும் ஆட்டோகாரன் சொல்கிறான் போலீஸ்காரர்கள் ஒழுங்கில்லை என்று.
.
புகாரை வாங்குவதற்கே வடை டீ கேட்கும் போலீஸ்காரன் சொல்கிறான் டாக்டர்கள் ஒழுங்கில்லை என்று.
.
தேவையில்லாத பரிசோதனைகளை மேற்கொள்ளும் டாக்டர்கள் சொல்கிறார்கள் பத்திரப் பதிவுத்துறை ஒழுக்கமில்லை என்று.
.
நிலமதிப்பில் ஒரு சதவிகிதத்தைக் கையூட்டாகக் கேட்கும் பத்திரப் பதிவு அலுவலக ஊழியன் சொல்கிறான் தாசில்தார் ஆபீசில் ஒழுக்கமில்லை என்று.
.
ஒரு சான்றிதழ் கொடுக்கப் பலநூறு ரூபாய் லஞ்சம் கேட்கும் தாசில்தார் ஆபீஸ் ஊழியன் சொல்கிறான் பள்ளிக்கூட வாத்தியார்கள் ஒழுங்கில்லை என்று.
.
பள்ளியில் நடத்த வேண்டிய பாடத்தை டியூஷன் என்ற பெயரில் நடத்திக் காசு பார்க்கும் வாத்தியார் சொல்கிறார் வாகன ஆய்வாளர் சரியில்லை என்று.
.
ஓட்டுனர் உரிமம் தர காசு கேட்கும் ஆர்.டி.ஓ ஆபீஸ்காரன் சொல்கிறார் நீதிபதிகள் ஒழுங்கில்லை என்று.
.
தீர்ப்புக்கு காசு வாங்கும் நீதிபதி சொல்கிறார் அரசியல்வாதிகள் ஒழுங்கில்லை என்று.
.
கமிஷன் வாங்காமல் காரியம் பார்க்காத அரசியல்வாதி சொல்கிறார் கோயில் குருக்கள்கள் ஒழுங்கில்லை என்று.
.
கோயில் குருக்களோ லோகமே ஒழுங்கில்லை என்கிறார்.
*இங்கு கொசுவாகிய நான் உயிர் வாழ ஒரு சொட்டு இரத்தம் எடுப்பதை எதிர்த்து என்னை கொல்லத்துனிவது எப்படி ஒழுங்கானதாக இருக்க முடியும்.*
அது சரி, மற்றவர் பார்வையில் யார்தான் ஒழுங்காக இருக்கிறார்கள்? தான் ஒழுங்கீனமாக இருக்கிறோம் என்பதை உணர்ந்தவர்கள் இங்கு இருக்கிறார்களா? தன்னைத் திருத்திக்கொள்ளாமல் அடுத்தவரைக் குறைகூறிக் கடந்து செல்வதே வாடிக்கையாகிவிட்ட இந்த சமுதாயம் உருப்படுமா?
.
*இங்கு யாருக்கும் அடுத்தவரைக் குறைசொல்லும் தகுதி இல்லை.*
இப்படிக்கு
கொசு
---தியாகராஜன்
No comments:
Post a Comment