தெருவிலிருந்து ஒரு குரல்
இரும்பு அது என்னிடம் ஏராளம் ஏராளம்
எவர்க்கு வேணும் மலிவாய்? வாரும் வாரும்
துரும்பாக இளைத்தார்க்கு அருமருந்து நானே
தோள் வலிமை காட்டத் தூண்டுவேன் பின்னே
உருக்க வெண்ணெயதை நெய்யும் வரும்
உடன் எனைச் சேர்க்க ஊரே மணக்கும்
கரும்பாய் இல்லறம் கட்டாயம் இனிக்கும்
கருத்தரிப்பு மையம் காணாமல் போகும்
பருப்போடு புளி சேர்த்து என்னைக் கடைந்தால்
பாய்ந்து உண்ணத் தோன்றும் பத்து விரல்களால்
கரு கருவெனக் கூந்தல் அது நீண்டு வளரும்
காசுக்குக் குறைக்கும் குடும்பம் (அழகு நிலையம்) பிழைக்கும்
மருத்துவர் (திரு) செல்வனும் மறுக்க மாட்டார்
மாறாக என்னைப் பரிந்தும் உரைப்பார்
முருங்கை தான் பேசுகிறேன் கொல்லையிலிருந்து
மோட்சம் தவிரத் தருவேன் உமக்கு நல்விருந்து.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment