எருமையின் வாதம்...
நானும் பால் தரேனே எனக்கில்லையே பொங்கல்
நயவஞ்சக மனிதா! உன் மனதோ செங்கல்
மான் ஏதும் தருகிறதா? மலைத்துப் போகிறாய்
மணக்குமுன் மங்கையை மான் விழி என்பாய்
தேன் ஒரு துளி வைத்து தீர்மானிக்கிறாய்
தீந்தமிழும், அதுவும் ஒன்றே என்பாய்
வான் மழை என்றோ பெய்தும் வள்ளல் என்பாய்
வகுப்பறையில் நீ பிழைத்தால் *வம்புக்கு இழுப்பாய்.
*வம்பு_எருமை மாடே!
__ குத்தனூர் சேஷுதாஸ்
-----------------------
பாசக் கயிறோடு வருபவனின்
பாசமிகு வாகனம் என்பதால்
பதறிப் போய் ஒதுக்குகிறரோ
பயந்து ஓடி ஒளிகின்றனரோ.
ஒருவேளை தோலின் கருமை
மக்களின் பாராமுகத்தின் காரணியோ
மந்த புத்தி எனும்
எண்ணம் பொதுபுத்தி அதனை ஒதுக்கிட வைத்ததோ?
ஐயோ பாவம் எருமை.
கணேசரின் கடைக்கண் பார்வை பட்டது
அதற்குக் கிடைத்த பெருமை.
- ஸ்ரீவி
No comments:
Post a Comment