அறிவில் சிறியோரை பெரியோர் ஆக்குவது
ஆ(சிரியர்).
...🙏 சாய் 🙏
-----------------------------------------
●०●०●०●०●०●०●०●०●०●०●०●०●०●०●
*நல்வழி காட்டும் நல்லாசிரியரே*
*நற்றுணையாவார் மாணாக்கருக்கு*
●०●०●०●०●०●०●०●०●०●०●०●०●०●०●
நாடே போற்றும் உத்தமராய்
நாட்டை உயர்த்தும் நல்லவராய்
உலகம் வியக்கும் வல்லவராய்
இன்றைய மாணவர் ஆவதெப்படி?
மண்ணில் விழும் விதைகள் யாவும்
கனிகள் தரும் விருட்சமாய் முளைக்க
சூரியக் கதிரும் நீரோட்டமும்
இன்றியமையாக் காரணிகளாம்
பள்ளி செல்லும் மாணவரெல்லாம்
பண்புகளோடு வாழ்வில் உயர
நல்வழி காட்டும் நல்லாசிரியரே
நற்றுணையாகும் காரணியாவார்.
தேர்வில் நல்ல மதிப்பெண் பெற
பாடங்களைக் கற்பிப்பதோடு
நல்லொழுக்கமும் நல் அறமும்
போதிப்பவரே நல்லாசிரியராம்
பாடப் புத்தகங்களையும் தாண்டி
மற்றப் புத்தகங்களையும் வாசிக்கப்
பழக்குவதோடு விவாதம் செய்யவும்
கற்பிப்பவரே நல்லாசிரியராம்
களிமண்ணை சிலைகளாக்கும்
உளிகொண்டு
சிற்பம் வடிக்கும்
அற்புத சிற்பிகள்
ஆசிரியர்களாம்.
வைரங்களை பட்டை தீட்டி
ஜொலிக்க இவர்கள் வைத்தாலும்
ஏற்றி விட்டு அழகு பார்க்கும்
ஏணிகளாக இருந்திடுவார்
ஆற்றைக் கடக்க உதவி செய்யும்
தோணிகளாக
உதவிடுவார்.
சாதி மத இன மொழி பேதங் கடந்து
யாதும் ஊரே யாவருங் கேளிர் என
விளையும் பயிருக்கு நன்னீர் ஊற்றினால்
ஞாலம் போற்றும் ஆசிரியர் அவரே!
மொத்தத்தில் சமூகம் தழைக்க
நற்றுணையாவது நல்லாசிரியரே!
இக்குழுவிலுள்ளோரை செதுக்கிய ஆசிரியர்களுக்கும்,
இக்குழுவில் உள்ள ஆசிரியர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும்
*ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்*
*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*
----------------------------------
வேண்டுவது நல்வழி காட்டி கற்பி
கல்லை அற்புத சிலையாக்கும் சிற்பி
ஆசிரியர் வழி நடக்கும் மாணவர்கள்
நிச்சயம் வெற்றிக்கு தகுதியானவர்கள்
ஒழுக்கம் ஊக்கம் நற்பயிற்சி
ஆதலால் அடைவது மேன்மேலும் வளர்ச்சி
பாடங்கள் பற்பல கற்று தந்தார்
மதிப்பெண்களுடன் மதிப்பைப் பெற்று தந்தார்
அடிக்கடி வலியுறுத்துவது நன்றாக படி
வாழ்வில் உயர வைக்கும் ஏணி படி
.
ஆரம்பத்தில் வருகிறோம் வெற்று பத்திரமாய்
சரித்திர நூல்கள் ஆக மாற்றுவீர் பத்திரமாய்
செப்டம்பர் 5 கொண்டாடும் ஆசிரியர் தினம்
உண்மையில் கொண்டாட படவேண்டும் தினம் தினம்
ஹரிஷ்
No comments:
Post a Comment