ஏங்கச் செய்கிறாயே !
எத்தனை இந்நாளில் " நான், நீ " போட்டியாம்
என்றாலும் எழுந்ததும் உன் நினைப்பே தான்
சுத்த சைவர்களும் விரும்பும் ஒன்றே
சுகம் தருகிறாய் இரண்டறக் கலந்தே
கொத்துக் கைத்தாய்க் கனிகள், இரசங்கள்
கொஞ்சமும் உன் அருகில் நில்லா பசங்கள்
புத்துணர்ச்சி அதன் மொத்த உருவே !
புலவன் வாய் பொய்யுரை இலையே
ஒத்தையாக வரும் நீ தான் சிங்கம்
ஓடி உனைக் கண்டு மற்றவை ஒளியும்
பத்தன் சொல்வேன் நீயோ தனிதான்
பெருகப் பருகப் பரவசம் இனிதான்
குத்தனூரிலும் உன் அடிமைகள் உண்டே
குதித்தால் தேர்தலில் வெற்றி உனதே
உத்தம ஒன்றே ! உனக்கிணை இல்லையே!
உலக உன் (காஃபி) தினத்தில் உளரவில்லையே.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment